தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் விரிவாக்கம் செய்து வைத்துள்ளார். புதிதாக 17 லட்சம் பேரின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கூறியதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மகளிரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்த ஆயிரம் ரூபாய் என்பது உதவித்தொகை அல்ல உரிமைத்தொகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
