ஈரோட்டின் விஜயமங்கலம் டோல்கேட் அருகே வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இக்கோட்டம் நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் அங்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று கோவில் செயல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
இதனால் விஜய் பொதுக்கூட்டம் நடத்துவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக விஜய் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தாமல் இருந்த நிலையில் சமீபத்தில் புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.
