“நாளை ஒட்டுமொத்த சென்னையே குலுங்க போகுது”… முதல்வரே எங்களுக்கு போன் பண்ண தான் போறாரு… ராமதாஸ் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

பாமக சார்பாக நாளை நடைபெறும் போராட்டத்தால் ஒட்டுமொத்த சென்னையே குலுங்கும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தர கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் டிசம்பர் 12 நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் தைலாபுரத்திலிருந்து சென்னை வந்துள்ள ராமதாஸ் ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, நாளை 38 மாவட்டங்களிலும் அமைதி வழி ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் போராட்டம் சென்னையை குலுங்க வைக்கும். பெரிய அதிர்வலைகளை உருவாக்கும். அமைதி வழி போராட்டம் இல்லை என்றால் சிறைச் செல்வது போல் வேறு மாதிரியான போராட்டம் செய்வோம். அதெல்லாம் தேவையில்லை. நீங்கள் அமைதியாகவே போராட்டம் செய்யுங்கள் நான் 10.5 சதவீதம் கொடுத்து விடுகிறேன் என்று தமிழக முதல்வர் ஆணையிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் இந்த முடிவு கிடைக்கலாம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.