சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீலேகா என்பவருக்கு திருமணமான நிலையில் கணவரை பிரிந்து தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று அவரின் பெற்றோர் கோவிலுக்கு சென்று இருந்த நிலையில் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. அப்போது அவருடைய வீட்டில் இருந்து கரும் புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் தீ எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர். அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். அதேசமயம் உள்ளே இருந்த ஸ்ரீலேகா உடல் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
