ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு சென்னையில் தொடங்கி வைத்தார். சத்குரு ஜக்கி வாசுதேவன் வழிகாட்டுதலின்படி ஈஷா அறக்கட்டளை தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை பராமரித்து வருகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு உதவும் இலவச தகன சேவை உள்ளது.
ஈஷா அறக்கட்டளை தமிழக அரசுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள 17 தகன எரிவாயு மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது. சென்னை வேலூர் தஞ்சாவூர் நெய்வேலி மற்றும் கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம் வீரகேரளம் துடியலூர் போத்தனூர் வெள்ளலூர் ஆலாந்துறை தொண்டாமுத்தூர் காரமடை கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பராமரித்து வருகிறது. சென்னையில் நேற்று இந்த திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர் நேரு, ஈஷா அறக்கட்டளையின் இந்த சேவையை பாராட்டினார்.
