புதுச்சேரியில் இன்று (டிசம்பர் 9) பிரச்சாரத்தில் பேசிய தலைவர் விஜய் , புதுச்சேரியில் நடக்கும் ஆட்சி பாரபட்சமின்றி செயல்படுவதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு, அதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் புதுச்சேரி மக்கள் திமுகவை நம்ப வேண்டாம், அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள் என்றும், தமிழ்நாடு தனி புதுச்சேரி தனி என்பார்கள் நமக்கு அப்படி கிடையாது. நாம் வேறு வேறு கிடையாது என்றும் கூறியுள்ளார்.
