மாலத்தீவில் 7வது கேரம் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா பாத்திமா மித்ரா இளவழகி அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் பங்கேற்று விளையாடினர். இப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர் இரட்டையர் மற்றும் மகளிர் குழு போட்டி ஆகிய 3 பிரிவுகளிலும் தங்கப்பதக்கங்களை வென்றார்.
மேலும் உலக கேரம் சாம்பியன் பட்டத்தையும் பெற்றார். சென்னைக்கு திரும்பிய கேரம் சாம்பியன் கீர்த்தனாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். 10ம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எனக்கு வீடு கூட இல்லை. அதையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
