திருப்பூரில் பாடகி சின்மயி குறித்து பேசிய நடிகர் ரஞ்சித் – விரைவில் அவர் உண்மையை பகிரங்கமாக சொல்வராா என்றும் கேள்வி!

By Elango on மார்கழி 8, 2025

Spread the love

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டியில் மராத்தான் ஓட்டப் போட்டி என்று நடந்தது இதில் நடிகர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, கலைஞர்களுக்கு மதமுமோ ஜாதியோ கிடையாது. மத்திய அரசின் சென்சார் போர்டு மூலமாக தணிக்கை செய்யப்பட்டு அங்கீரிக்கப்பட்ட ஒரு படத்தில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட பாடலின் அர்த்தம் தெரிந்து பாடிவிட்டு தற்போது பாடகி சின்மயி அதுகுறித்து விமர்சித்து பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. திரௌபதி 2 படத்தின் கதையை நான் கேட்டுள்ளேன்.

மிகவும் நல்ல கதை. பிளவுபடுத்தப்பட்டு இருக்கிற மக்களை இணைப்பதற்கான ஒரு கதையாக தான் நான் பார்க்கிறேன். இது போன்ற ஒரு கதைக்கு பாடலை பாடிவிட்டு எந்த விஷயத்திற்காக சின்மயி இதை எதிர்த்திருக்கிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த காலங்களில் தனக்கு நடந்தவற்றை பகிரங்கமாக பேசிய பாடகி சின்மயி இந்த விவகாரத்தில் தனக்கு என்ன அழுத்தம் ஏற்பட்டது என்பது குறித்து விரைவில் பகிரங்கமாக சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன் என்று நடிகர் ரஞ்சித் கூறியிருக்கிறார்.