பெரும்பாலும் நமது வீட்டுக்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் பழகியவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் தருவது நமது தமிழ் பாரம்பரியத்தில் வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கு நம் முன்னோர் ஒரு முக்கிய காரணமும் வைத்திருக்கிறார்கள். யாராவது உங்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கும் போது ஒரு சொம்பு நிறைய எப்போதும் கொடுங்கள். நிச்சயம் அவர்கள் அந்த தண்ணீரை முழுவதுமாக குடிக்க மாட்டார்கள். மீதமான தண்ணீரை அப்படியே வைத்துவிடுவார்கள்.
அந்த தண்ணீர் அவர்கள் இருக்கும் வரை அப்படியே அங்கேயே இருக்கட்டும். அவர்கள் சென்ற பிறகு அந்த தண்ணீரை எடுத்து வீட்டுக்கு வெளியே கால் படாத இடத்தில் அல்லது செடியில் ஊற்றி விட வேண்டும். இதனால் உங்கள் வீட்டுக்கு வந்து சென்றவர்களின் எதிர்மறை ஆற்றல்கள், கண் திருஷ்டிகள் உங்களை தாக்காது. இந்த அடிப்படையில் தான் அன்றைய காலகட்டத்தில் இருந்தே வீட்டுக்கு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் தரும் ஒரு பழக்கம் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் வெளியிலிருந்து வருபவர்கள் எந்த மாதிரியான மனநிலையில் வீட்டுக்குள் வந்தாலும் அவர்களின் படபடப்பான மனநிலையை சாந்தப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் தருவதாகவும் கூறப்படுகிறது.
