2026 முதல் புதிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ், அதிரடியான கட்டுப்பாட்டை அறிவித்த திருப்பூர் சுப்ரமணியன் – கதிகலங்கிப் போன தயாரிப்பாளர்கள்!

By Elango on மார்கழி 8, 2025

Spread the love

தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 100 கோடி 150 கோடி ரூபாய் என சம்பளம் வாங்கிய நடிகர்களே இன்று சூட்டிங் இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கின்றனர். இதற்கு காரணம் எல்லா தயாரிப்பாளர்களையும் அவர்கள் காலி செய்து விட்டார்கள். இதை செய்தது அந்த பெரிய நடிகர்கள்தான்.

வருகிற 2026ம் ஆண்டு முதல் தொடங்கப்படும் புதிய படங்கள் எதுவும் தியேட்டர்களில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும். இதை கடைபிடிக்காத படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் ஓடிடி தளங்களில் படங்கள் வெளியீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் வருகிற டிசம்பர் 9ம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ளதாகவும் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.