முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்படுகிறது.
இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலை வந்தடைந்தனர். கோவில் முன்புள்ள கடல் மற்றும் நாழிக்கிணறு புனிதத் தீர்த்தத்தில் நீராடினர். சுமார் 4 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கம்போல இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 530 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து முருகப் பெருமானுக்கு மற்ற கால பூஜைகள் நடந்தது.
