தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அதிமுக மற்றும் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளார். அதே சமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ அவர் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் அவருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக சமீபத்தில் செங்கோட்டையன் இணைந்த நிலையில் நேற்று நாஞ்சில் விஜயன் கட்சியின் இணைந்தார். இதனால் விஜய்க்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு பரப்புரை செயலாளர் பதவியை விஜய் வழங்கியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான அவர், நம்மோடு பயணிக்க இருப்பது பெரும் மகிழ்ச்சி என விஜய் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் ஆனந்துடன் இணைந்து நாஞ்சில் சம்பத் பணியாற்றுவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
