“வாயை மூடிக்கிட்டு அமைதியா உட்கார்ந்திருக்கீங்க” இண்டிகோ ஊழியருடன் சண்டையிட்ட பெண்… மும்பை விமான நிலையத்தில் அதிர்ச்சி..!!

By Soundarya on மார்கழி 6, 2025

Spread the love

கடந்த இரண்டு நாட்களில் சுமார் 1,500 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்துகள் மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட பல முக்கிய விமான நிலையங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கோபமடைந்து, மும்பை விமான நிலையத்தில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பெண் பயணி ஒருவர் விமான நிலைய ஊழியர் ஒருவரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கவுண்டருக்குப் பின்னால் பயணிகள் கூட்டம் நிற்பதையும், ஒரு பெண் ஊழியர்களை நோக்கி கத்துவதையும் வீடியோ காட்டுகிறது. ” நாங்க என்ன கேட்டாலும் வாயை மூடிக்கிட்டு ரொம்ப அமைதியா உட்கார்ந்திருங்க என்று கோபமாக கத்துகிறார்.