Tamil Nadu government

மாதம் ரூ. 50 ஆயிரம் வருமானம் ஈட்ட விருப்பமா? தமிழக அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு – இலவச பயிற்சியில் சேர உடனே அப்ளை பண்ணுங்க!

By Elango on மார்கழி 5, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கொடுவள்ளியில் உள்ள பால் மற்றும் உணவு தொழில்நுட்ப கல்லூரியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பால் பொருட்கள் தயாரிப்பு குறித்த 25 நாட்கள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 10ம் தேதி இந்த பயிற்சி முகாம் துவங்குகிறது. பால் பண்ணை உதவியாளர், பால் பொருட்கள் தயாரிப்பு உதவியாளர் என 2 பிரிவுகளில் 25 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் மூலம் வங்கிகளில் கடனுதவி பெற்று சொந்தமாக தொழில் தொடங்கலாம். மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை எளிதாக சம்பாதிக்கலாம். பெரிய பால் பண்ணைகள் ஆவின் பாலகங்கள் தனியார் பால் நிறுவனங்கள் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் உடனடி வேலைவாய்ப்பை பெறலாம். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் 94441 55312 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் பயிற்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.