தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளுக்கும்… வந்தது உத்தரவு….!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

தமிழக பள்ளிக்கல்வித்துறை அடிக்கடி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நிர்வாக சீர்திருத்தங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில் பள்ளி கல்வியின் செயல் திட்டங்கள் மற்றும் மாணவர்களின் கற்றல் நிலையின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக இனி மாதம் தோறும் அலுவல் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை மாதம் தோறும் ஐந்தாம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டப் பொருள் சார்ந்த விவகாரங்கள் ஒவ்வொரு மாதமும் நான்காவது வாரம் இறுதியில் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும்.

அதன் விவரங்களை இயக்குனரகத்திற்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன்படி டிசம்பர் மாதத்திற்கான கல்வி சார் அலுவல ஆய்வு கூட்டம் டிசம்பர் 5 இன்று காணொளி மூலமாக நடைபெறும். இதற்கான கூட்டப்பொருள் அதாவது பள்ளி ஆண்டாய்வு, பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு, திறன் திட்டம், குறைந்த செயல் திறன் கொண்ட பள்ளிகள் ஆகியவை குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை பூர்த்தி செய்து துரிதமாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.