தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில்நேற்று தெருநாய்கள் கூட்டம் ஒன்று 7 வயது சிறுவனைத் தாக்கியதில் அச்சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார். ஹயத்நகர் பகுதியில் சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் சிறுவனின் காதுகளை நாய் கடித்துவிட்டதாகவும், இடுப்பு மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
హయత్నగర్లో దారుణం
ఏడేళ్ల చిన్నారిపై దాడి చేసిన వీధి కుక్కలు
చెవి ఊడిపోయి, తీవ్ర గాయాలపాలైన బాలుడు
రంగారెడ్డి జిల్లా హయత్నగర్ పరిధిలోని శివగంగ కాలనీలో, ఇంటి ముందు ఆడుకుంటున్న ఏడేళ్ల బాలుడిపై దారుణంగా దాడి చేసిన 10 వీధి కుక్కలు
సమయానికి స్పందించి, బాలుడిని రక్షించి,… pic.twitter.com/5rMfugkB5u
— Telugu Scribe (@TeluguScribe) December 2, 2025
அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நாய்களை விரட்டினர். பின்னர் குழந்தை நல்லகுண்டாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. நவம்பர் 11 ஆம் தேதி இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவனை தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன. பாதிக்கப்பட்ட ரித்விக் என அடையாளம் காணப்பட்டவர், ஃபரூக்நகர் மண்டலத்தின் நகுல்பள்ளி கிராமத்தில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது தாக்கப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள சரோஜினி தேவி கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இப்படி நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
