தமிழகத்தையே உலுக்கும் கொடூரம்… வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்… மகன், காதலனுடன் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம்… போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த குடியாத்தத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருப்பதியில் மகன் மற்றும் காதலனுடன் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் (30) தனது மனைவியை பிரிந்து அதே பகுதியை சேர்ந்த பொன்னக்குட்டே நாயகி (30) என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார். ஏற்கனவே திருமணம் ஆன நாயகி தன்னுடைய 3 வயது மகனுடன் மூன்று மாதங்களுக்கு முன்பு சத்யராஜ் உடன் திருப்பதியில் அரசு சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வழங்கிய இந்திரம்மா அடுக்குமாடி வீட்டில் வாடகைக்கு குடி பெயர்ந்தார்.

அந்தப் பகுதியில் தினக்கூலி வேலைகளை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இப்படியான நிலையில் இந்த மாதம் 22ஆம் தேதி காலை முதல் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அதே நேரத்தில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் உடனே அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவுகள் திறந்து பார்த்தபோது மூன்று பேரின் உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சத்யராஜ் தூக்கில் தொங்கிய நிலையிலும் நாயகி தனது மகனுடன் கழிவறைக்கு அருகிலும் கிடந்துள்ளனர்.

   

உடல்களுக்கு அருகில் விஷ பாட்டில் கண்டெடுக்கப்பட்டதால் நாயகி அவருடைய மகனுடன் முதலில் விஷம் குடித்து இறந்து இருக்க வேண்டும், பிறகு சத்யராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மறுப்புரம் சத்யராஜ் அந்த பெண்ணையும் அவருடைய மகனையும் கொன்று தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.