உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில்பானிபூரி சாப்பிடும்போது ஒரு பெண்ணின் தாடை அப்படியே நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் பதிவான இந்த சம்பவம், நாடு முழுவதும் உள்ள பானி-பூரி பிரியர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
https://x.com/i/status/1995374928527601840
இன்கிலா தேவி என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், ஒரு குடும்ப உறுப்பினருடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர கடையில் நிறுத்தி பானிபூரி சாப்பிட முடிவு செய்தார். அப்போது தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது வாயில் பானிபூரியை திணிக்க முயன்றபோது தான் வாய் அப்படியே நின்றுபோயுள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகியுள்ளார்.
