இந்தோனேசியாவின் வடக்கு மற்றும் மேற்கு சுமத்ரா, அச்சே மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 442 ஆக உயர்ந்துள்ளது.
2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், 400-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளார்கள். இராணுவத்தின் உதவியுடன் அவர்களை தேடும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
