இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்… நிவாரணப்பொருட்களை வழங்கிய இந்தியா…!!

By Soundarya on கார்த்திகை 29, 2025

Spread the love

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளது . கனமழை மற்றும்  நிலச்சரிவின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆகவும் உயர்ந்துள்ளது .மேலும் 21 பேர் மாயமாகியுள்ளார்கள். இவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது .600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட  இலங்கைக்கு ஆபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கி உள்ளது.  நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவம் விமானம் கொழும்புவில் தரை இறங்கி உள்ளது.  தார்பாய்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் சாப்பிட தயாராக உள்ள உணவுப்பொருட்கள் உட்பட சுமார் 12 டன் நிவாரண பொருட்களை ஏற்றி சென்றுள்ளது இந்திய ராணுவம்.