தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் தனது முதல் ரோடு ஷோவை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்துவதற்காக அனுமதி கோரி, தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக காவல்துறைக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
2026 மக்களவை தேர்தலையொட்டி, தமிழகத்தில் ரோடு ஷோ எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் நடத்த விஜய் அனுமதி கோரியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
