இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருந்தி மந்தனா, பிரபல இந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சல் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் அவருக்குத் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே இந்தத் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பின்பு பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். தற்போது இருவரும் குணமடைந்துள்ள நிலையில் ஸ்மிருதி திருமணப் புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் முச்சல் ஸ்மிருதிக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், வேறு ஒரு பெண்ணை ஸ்விமிங்க் செய்ய அழைத்ததாகவும் தகவல் பரவி வந்தது. ஒருவேளை இது வதந்தியாக இருக்குமோ என நினைத்த நிலையில் தற்போது ஸ்மிருதி மந்தனாவின் சிறந்த நண்பர்களான ராதா யாதவ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஹர்மன்ப்ரீத் கவுர் – அனைத்து இந்திய பெண் வீராங்கனைகளும் பலாஷ் முச்சலைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.
