தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்காக கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் மாநில அளவிலான கலை திருவிழா நவம்பர் 25 இன்று தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி கலை திருவிழா போட்டிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கரூரிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 26 கிருஷ்ணகிரியிலும், 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்திலும், 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
