இன்னும் 2 நாளில் மீனத்தில் ஏழரை சனி… அடுத்த 8 மாதத்திற்கு பாடாய்படப்போகும் 3 ராசிக்காரர்கள்…!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் நாம் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கர்ம பலன்களை கொடுக்கக் கூடியவர். இந்நிலையில் சனி பகவான் நவம்பர் 28 அதாவது நாளை மறுநாள் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையப்போகின்றார். 2026 ஜூலை 26 ஆம் தேதி வரை இருப்பார். அதன்படி சனி வக்கிர நிவர்த்தி அடைவதால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் தொடர்ந்து துன்பங்களை அனுபவிக்க போகிறார்கள்.

மேஷம்:

   

இந்த ராசிக்காரர்கள் நிறைய மன அழுத்தங்களை சந்திக்க நேரிடும். வேலைகளில் தொடர்ந்து தடைகளை சந்திக்க கூடும். பேசும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலைகளில் சிக்கல்களை சந்திக்கலாம். பணத்தை புத்திசாலித்தனமாக செலவழிக்க வேண்டும். பெரிய அளவு நிதி இழப்பை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் மந்த நிலையை சந்திக்க கூடும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

   

கும்பம்:

 

வேலையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். புதிய வேலைகளை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். எந்த நேரத்திலும் பொறுமையை இழக்கக்கூடாது. தனிப்பட்ட வாழ்க்கையில் மூன்றாம் நபரை தலையிட விட வேண்டாம். மற்றவர்களின் கருத்தைக் கேட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. வேலை தொடர்பான பிரச்சனைகள் சோர்வை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

மீனம்:

இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சவால்களை சந்திப்பார்கள். குடும்ப வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். திருமணத்தில் தடைகளை சந்திக்க கூடும். நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். நிறைய சவால்களை சந்திக்க நேரிடும்.