பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பைத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் திருமணத்திற்காக மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மேள தாளங்கள் முழங்க மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்று வந்த நிலையில் மணமகன் வெகுநேரமாக கண்ணாடி அணிந்து இருந்ததை மணமகள் கவனித்து வந்துள்ளார்.
இதனால் அவருக்கு மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அது உடனடியாக வெளிக்காட்டாமல் இருந்துள்ளார். பின்னர் திருமண சடங்குகள் நடைபெற்ற போது தான் மணமகன் கண்ணாடி கழற்றி உள்ளார். அப்போதுதான் அவருக்கு கண் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதை மறைத்து அவர் திருமணம் செய்ய முயன்றதை அறிந்த மணமகள் கோபத்தில் திருமணத்தை நிறுத்திவிட்டு மண்டபத்திலிருந்து வெளியேறினார். இதனால் திருமண மண்டபத்தில் குழப்பம் நிலவியது
