“அந்த மனசு தான் கடவுள்…” கேட்காமலே ரூ.50,000 பணத்தை தூக்கி கொடுத்த விஜய் சேதுபதி…. யாருக்கு தெரியுமா…? குவியும் பாராட்டுக்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 24, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி, ஒரு படகு ஓட்டுநருக்குச் செய்த உதவி குறித்த தகவல் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்தில் ‘மகாராஜா’ மற்றும் ‘தலைவன் தலைவி’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

ஒருமுறை விஜய் சேதுபதி படகில் படப்பிடிப்புக்காகச் சென்றிருந்த போது, ஷூட்டிங் முடிந்தபின் கரைக்குத் திரும்பியுள்ளார். அப்போது படகை ஓட்டிச் சென்ற நபரிடம், “இந்தப் படகு உங்களுக்குச் சொந்தமானதா?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஓட்டுநர், “இல்லை” என்று பதிலளித்துள்ளார்.

   

உடனே விஜய் சேதுபதி, “இந்தப் படகை நீங்கள் சொந்தமாக வாங்க எவ்வளவு செலவாகும்?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஓட்டுநர், “ஐம்பதாயிரம் ரூபாய்” என்று கூறியவுடன், அந்த இடத்திலேயே அவருக்கு ரூ. 50,000க்கான காசோலையை எழுதிக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இதனை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர்.