உத்திரபிரதேச மாநிலத்தில் 9 வயது மனைவியை பள்ளி மேலாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தியோரியா மாவட்டத்தின் ஸ்ரீராம்பூர் காவல் நிலையப் பகுதியில் ஒரு தனியார் பள்ளியின் மேலாளர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று 9 வயது மாணவி ஒருவருக்கு போன் செய்து, தனக்கு முக்கியமான பள்ளி வேலை இருப்பதாகக் கூறினார்.
இதை நம்பி அந்த மனைவியும் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவளை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கண்ணீருடன் வீடு திரும்பியதும், நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. குற்றம் சாட்டப்பட்ட மேலாளர் கைது செய்யப்பட்டார். பள்ளி அங்கீகாரம் இல்லாமல் இயங்கியதும் தெரிய வந்துள்ளது. தொகுதி கல்வி அலுவலரின் புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
