சாகித்திய அகாடமி விருது வென்ற தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன் காலமானார். சென்னை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதிகளவில் கவிதை தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உடலுக்கு CM ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, கவிஞர் வைரமுத்து, மதன் கார்க்கி, அன்புமணி, தங்கம் தென்னரசுஉள்ளிட்டோரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். இவருடைய உடல் நாளை மாலை அரும்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
