இதெல்லாம் நாடகம்….! இசை நிகழ்ச்சியில் சாமி ஆடுறாங்க…. எனக்கு சுத்தமா பிடிக்கல…. சூப்பர் சிங்கரை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்…!!

By Devi Ramu on கார்த்திகை 22, 2025

Spread the love

பிரபல இசையமைப்பாளரும்,  நிகழ்ச்சி  தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளின் தரம் குறித்து வெளிப்படையாகத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், பொதுவாகத் தனக்குத் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் பெரிய விருப்பம் இல்லை என்று கூறினார். காரணம், அவை பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கு ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கின்றன என்று விமர்சித்தார்.

   

எனினும், விஜய் டிவியில் ஆரம்பத்தில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி குறித்துப் பேசும்போது, ஆரம்பகாலத்தில் சுமார் 10-15 வருடங்களுக்கு முன் அந்த நிகழ்ச்சி மூலம் பல தொழில்முறைப் பாடகர்கள் உருவாக்கப்பட்டதாகவும், அப்போது நடுவராக இருந்த அனந்து போன்றவர்கள் ஒவ்வொருவரையும் பட்டை தீட்டி வெளியே அனுப்பியதாகவும் பாராட்டியுள்ளார்.

   

ஆனால், இப்போதைய நிலைமை குறித்துக் கருத்து தெரிவித்த அவர், இந்த நிகழ்ச்சிகள் இப்போது வணிக ரீதியாக மட்டுமே நடத்தப்படுவதாகவும், ஒரு வட்டத்திற்குள் சிக்கிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

 

இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளில், இசைக்கும் நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லாமல் ‘பக்தி சுற்று’ என்று வைத்துச் சாமி ஆடுவது, அழுகைக் காட்சிகள், பொருத்தமற்ற உடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது தனக்குப் பிடிக்கவில்லை என்றும், இது வெறும் நாடகமாகவே நடக்கிறது என்றும் ‘சூப்பர் சிங்கர்’, ‘சரிகமப’ போன்ற நிகழ்ச்சிகளில் நடக்கும் நாடகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த வெளிப்படையான விமர்சனம், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளின் தரம் குறித்துத் தற்போது விவாதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.