குஜராத் மாநிலம் பவநகரில் உதவி வன பாதுகாவலர் சைலேஷ் காம்ப்ளா என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்து வீட்டின் அருகே புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காம்ப்ளாவுக்கு ஒரு சகா பெண் ஊழியருடன் சுமார் 4 வருடங்களாக கள்ளக்காதல் இருந்தது தெரியவந்துள்ளது. சூரத்திலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்த குடும்பத்தினர் காணாமல் போனதாக காம்ப்ளா நாடகமாடியுள்ளார்.
ஆனால் அவருடைய சந்தேகத்திற்குரிய நடத்தை விசாரணையில் சிக்க வைத்தது. அவர் தனது இளநிலை அதிகாரியிடம் குப்பைகளை கொட்ட சொல்லி இரண்டு குடிகளை தோண்ட வைத்துள்ளார். கடந்த நவம்பர் 16ஆம் தேதி அன்று இந்த புள்ளிகளில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளின் உடல்களை போலீசார் மீட்டனர். அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு மற்றும் கள்ளக்காதல் காரணமாகவே இந்த கொலையை செய்ய திட்டமிட்டதாகவும் கொலையை மறைப்பதற்கு மனைவி வீட்டை விட்டு சென்றதாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது மனைவி நயனா மற்றும் 13,9 வயதுள்ள இரண்டு குழந்தைகளையும் தலையணையால் அமுக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இருவரையும் கொன்று அவர் வீட்டின் அருகே புதைத்துள்ளார். தற்போது இறந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
