சவுதி அரேபியா மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியது. இதனால் மளமளவென தீ பற்றி 42 யாத்ரீகர்கள் உயிருடன் எரிந்து சாம்பலை இறந்துள்ளனர். அவர்களில் 20 பேர் பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இறந்தவர்கள் அனைவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் நள்ளிரவு 1.30 மணிக்கு முஃப்ரிஹாத் என்ற பகுதியில் நடந்துள்ளது.
