இந்திய ரயில்வே, குழந்தைகளுடன் பயணிப்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு விதிகளில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்து, இருந்த குழப்பங்களைத் தெளிவுபடுத்தியுள்ளது. இனி, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகளின் வசதிக்கேற்ப வயது வாரியாகக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தனி இருக்கை அல்லது படுக்கை (Berth) தேவை இல்லை என்றால், அவர்கள் டிக்கெட் இல்லாமல் பயணிக்கலாம். மாறாக, தனி இடம் வேண்டுமென்றால், பெரியவர்களுக்குரிய முழுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஐந்து முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தனி இருக்கை தேவையில்லை என்றால் (‘No Seat/No Berth’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால்), அவர்கள் அரை டிக்கெட்டில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், தனிப் படுக்கை தேவைப்பட்டால், முழுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சாதாரண பெரியவர்களுக்கான கட்டணமே பொருந்தும். டிக்கெட் முன்பதிவின்போது குழந்தையின் சரியான வயதையும், இருக்கைத் தேர்வையும் துல்லியமாக உள்ளிடுவது அவசியம்.
தவறான தகவலை அளித்தால் டிக்கெட் செல்லாததாகக் கருதப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம். இந்தக் குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகள், குழந்தைகளுடன் பயணம் செய்யும் குடும்பங்களுக்குப் பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.
