2026 தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் கூட்டணியில் பல சிறிய கட்சிகள் அதிமுக, திமுக போன்ற கட்சிகளோடு இணைந்து வருகிறது. அந்தவகையில் அதிமுக கூட்டணியில் இணைவதாக ஃபார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசுமையை நேரில் சந்தித்தனர். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
