வியாபாரிகளுக்கு பேரிடி…! பூஜா பம்பர் லாட்டரி…! இதுவரை நடக்காத அதிர்ச்சி சம்பவம்….!

By Devi Ramu on கார்த்திகை 10, 2025

Spread the love

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை தற்போது நடக்கிறது. குலுக்கல் நவம்பர் 22-அம தேதி அன்று நடைபெறும். முதல் பரிசு ரூ.12 கோடி. டிக்கெட் விலை ரூ.300 ஆகும். கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு தனி மவுசு உண்டு.  தமிழ்நாடு, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் வாங்குவதால் விற்பனை எப்போதும் உச்சம். ஆனால் இம்முறை பூஜா பம்பர் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது

இன்னும் இரண்டு வாரத்தில் குலுக்கல் நடைபெறும். இதுவரை 26 லட்சம் டிக்கெட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 45 லட்சம் அச்சிடப்பட்டு 39 லட்சம் விற்றது. இந்த ஆண்டு எதிர்பார்ப்புக்கு மாறாக மந்தமான விற்பனை லாட்டரி வியாபாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

   

இம்முறை பூஜா பம்பர் தாமதமாக தொடங்கியது. திருவோணம் குலுக்கல் செப்டம்பர் 27க்கு பதிலாக அக்டோபர் 4 அன்று நடந்தது. அதன் பின் விற்பனை தொடங்கியது. இதுவும் டிக்கெட் மந்தமான விற்பனை செய்ய காரணம் ஆகும்.