காலையிலேயே ஷாக்.! துப்பாக்கி முனையில் 5 இந்தியர்கள் கடத்தல்… அல்கொய்தா பயங்கரவாதிகள் அட்டூழியம்..!!

By Soundarya on கார்த்திகை 9, 2025

Spread the love

மாலி நாட்டில் வேலை செய்து வந்த ஐந்து இந்தியர்கள் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவால் கடத்தப்பட்டுள்ளார்கள். மாலியை கைப்பற்றும் நோக்கத்தில் அந்த நாட்டு தலைநகர் பமாகோவை அல்கொய்தா பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து வரும் நிலையில் இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது