காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்றம் விதித்த கால கெடுவுக்குள் குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் டெல்லியில் இருந்து தடவியல் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. அதனால் தான் தாமதம் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று வாரத்தில் பரிசோதனை முடிவுகளை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
