தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் மு.க தமிழரசுவின் மகனுமான அருள்நிதி படப்பிடிப்பு தளத்திலிருந்து போது சூட்டிங்கில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் வலி அதிகரிப்பு காரணமாக அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் இன்று அறுவை சிகிச்சை நடந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருள் நீதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அதுமட்டுமல்லாமல் உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பிறகு முதல்வர் அங்கிருந்து புறப்பட்ட நிலையில் அப்போது அவருடன் எம்பி ஆர் ராசா உடன் இருந்தார். தற்போது அருள்நிதி உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
