கனடா விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. கனடா தன்னுடைய புதிய விசா விதிகளை வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் சுமார் 380,000 நிரந்தர குடியிருப்பாளர்களை அனுமதிக்கப் போவதாக திட்டமிட்டுள்ளது. தற்காலிக குடியிருப்பாளர்களின் பங்கை மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் 15.5 மில்லியன் மாணவர்களை மட்டுமே படிக்க அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. 2027 – 28 ஆம் ஆண்டில் 150,000 மாணவர்கள் மட்டுமே கனடாவில் படிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இது கடந்த வருடத்தை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைவாகும். மேலும் இது சாதாரண மாணவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களின் பன்முகத்தன்மையை பாதிக்கக்கூடும். அடுத்த இரண்டு வருடங்களுக்கு 220,000 தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் 2026 ஆம் ஆண்டில் 230,000 தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இருந்தாலும் 33,000 தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியிருப்புக்கான உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களில் தோராயமாக 50 சதவீதம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த விகிதம் 80 சதவீதம் எட்டும் என தெரிகிறது. இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களில் 74 சதவீதம் 2025 ஆகஸ்ட் மாதத்தில் நிராகரிக்கப்பட்டது மேலும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
