OMG: பள்ளிக்கு தாமதமாக வந்ததால் வீட்டுக்கு அனுப்பிய ஆசிரியர்… போகும்வழியில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான சிறுமி…!!

By Soundarya on கார்த்திகை 7, 2025

Spread the love

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் – சரளா தம்பதியின் மகள் காவியா. எட்டு வயதான இவர், இன்று  பள்ளிக்கு தாமதமாக சென்றதால், ஆசிரியர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால்  சிறுமியை அவரது உறவினர் ஸ்கூட்டரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஸ்கூட்டரின் முன்பு சிலிண்டரும், பின்புறம் சிறுமியும் இருந்துள்ளார். அப்போது எதிர்பார்த்தவிதமாக நிலைதடுமாறி சிலிண்டர் விழுந்த நிலையில், சிறுமியும் கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமி மீது மாநகராட்சி குப்பை லாரி, மோதியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.