தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுக்கும் 5000 ரூபாய் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர் பி உதயகுமார், நகராட்சி துறை பணி நியமனத்தில், தல 25 லட்சம் பெறப்பட்டது. மொத்தம் எத்தனை கோடி லட்சம் பெறப்பட்டது என தெரியவில்லை. தமிழகமே குட்டிச்சுவராக உள்ளது. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூட திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கூட்டணி தர்மம் என்ற பெயரில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்க மறுக்கின்றன.
தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் எந்த குழப்பமும் கிடையாது. ஆனால் திமுக முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. அதனால்தான் 38 ஆட்சியர்களிடமும் அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளோம். இந்தப் பணியை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் படிவங்களை பெற திமுகவினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் மூலமாக ஸ்டாலின் பேச்சை திமுக தொண்டர்கள் கேட்பதில்லை என்று நன்றாகவே தெரிகிறது என்று ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
