நாளுக்கு நாள் கள்ளக்காதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதுகுறித்து ஏராளமான செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர்கள் மாதவன் நாயர் – ரேணுகா மேனன் தம்பதி. இவர்களுக்கு கிஷோர் என்ற 17 வயது மகன் உள்ளார். கணவர் மாதவன் நாயர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், மனைவி மற்றும் மகன் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகன் கிஷோரின் 17 வயது நண்பர் ஒருவருடன் தாய் ரேணுகா அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதை அறிந்த அந்த சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். அதன் பேரில் ரேணுகாவை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
