தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கு முன்னதாக அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது அதனை விஜய் களத்தில் இறங்கி முற்றிலுமாக மாற்றியுள்ளார். இதனால் 2026 தேர்தல் களம் யாருக்கானது என்பது பரபரப்பாகவே பார்க்க படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் புதிதாக அரசியலில் களம் இறங்கியுள்ள விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான், யாருடனும் கூட்டணி கிடையாது என்று சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இன்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கலகம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் விஜய் என பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்திருப்பது அவர்கள் உரிமை, ஆனால் முதல்வரை முடிவு செய்வது மக்கள் என ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். SIR தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பிறகு பேசிய அவர், தேர்தல் அலுவலர்களை மிரட்டி திமுகவினர் படிவங்களை பறிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். SIR மூலம் சிறுபான்மையினரின் வாக்குகள் பறிக்கப்படும் என சிலர் கூறுவதில் உண்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
