BREAKING: மீண்டும் கனமழை… தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு அலர்ட்….!

By Nanthini on கார்த்திகை 5, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது