இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், தலைமை பயிற்சியாளர் அமோல் முசும்தாரின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் முறையாக ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 பட்டத்தை வென்றது. ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி சர்மாவின் அபாரமான ஆட்டம் இந்தியாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை உறுதிசெய்து, நாட்டின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் பாதித்தது.
இந்நிலையில் உலகக்கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந் இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு உத்தர பிரதேச காவல்துறையில் DSP பதவி வழங்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை இறுதி போட்டியில் 50 ரன்கள் மற்றும் 5 விக்கெட்களை வீழ்த்தி கோப்பையை வெல்வதற்கு தீப்தி சர்மா முக்கிய பங்காற்றினார். தொடர் நாயகி விருதையும் வென்ற இவர் ஒட்டுமொத்த 2025 உலகக்கோப்பையில் 215 ரன்களையும், 22 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தார்.
