பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. நேரடி பரிமாற்றம் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு பணம் டெபாசிட் செய்யப்படும். எனவே விவசாயிகள் ஆதார் அல்லது வங்கி எண்ணெய் பயன்படுத்தி pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கட்டண நிலையை சரி பார்க்கலாம். பி.எம் கிசான் திட்டத்தின் 21-ஆவது தவணை இந்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் தங்களது பெயரில் சொந்தமாக சாகுபடி செய்யப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும். கேஒய்சி சரிபார்ப்பை முடித்துவிட்டு ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். நிலம் வாங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டும். கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க தவறியவர்கள் பணத்தை பெற மாட்டார்கள். பணம் வருமா? என்பதை தெரிந்து கொள்ள பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று “farmers corner” என்ற ஆப்ஷனில் உள்ள “beneficiary status” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் ஆதார், மொபைலின் வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் பணம் மற்றும் தவணை நிலையை சரிபார்க்க “get data” என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் கார்டு, நில உரிமை சான்று, வங்கி கணக்கு புத்தகம், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், ஆதார் கார்டு அப்டேட்.
