தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார். அடுத்தடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக எந்த கட்சியோடும் அவசரப்பட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று தமிழக வெற்றிக்கலகம் முக்கிய நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனுடன், அருண் ராஜ் கூட்டணி குறித்து பேசியதாக தெரிகிறது. இதனால் அவரை அழைத்து பேசிய விஜய் கூட்டணி என்பது தனிநபர் முடிவெடுக்கும் விவகாரம் அல்ல, கட்சித் தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது
