தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் தங்க நகை கடன் ஒரு கிராமுக்கு 6000 ரூபாயில் இருந்து 7000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இந்த அறிவிப்பு அவசரப்பான தேவைக்காக நகைகளை அடகு வைப்பவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் என்று பல்லாயிரக்கணக்கான கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அவசர பண தேவை ஏற்படும் சமயத்தில் அதிக ஆவணங்கள் மற்றும் சிக்கலான நடைமுறைகள் இன்றி மிக எளிதில் கடன் பெற முடிவதால் பெரும்பாலானோர் நகை கடனுக்காக கூட்டுறவு வங்கிகளை நாடுகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்திய சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராமுக்கு 6000 ரூபாய் கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 7000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
