இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) நிறுவனமானது சமீபத்தில் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்கியது. இதனை அடுத்து பலரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறினார்கள். இந்த நிலையில் தீபாவளி ஓட்டி சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்தது. அந்தவகையில் ஒரு ரூபாய் செலுத்தி புதிய சிம் கார்டு வாங்கினால் தினசரி 2 ஜிபி டேட்டா அன்லிமிடெட் கால் ப்ளானை தருகிறது.
முதல் ஒரு வாரத்திற்கு இந்த பிளான் செல்லுபடியாகும். நவம்பர் 15ஆம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு 2 GB டேட்டா, 100 SMS மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். புதிதாக சிம் வாங்குவோருக்கு மட்டுமே இந்த ஆஃபர் பொருந்தும்.
