உத்திரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி பாலேஸ்வர் பட்டி என்பவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் அங்கிருந்த செவிலியர்கள் குழந்தைக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை செலுத்தினர். அவ்வாறு செலுத்தப்பட்ட ஒரு ஊசியால் குழந்தையின் கையில் வீக்கம் ஏற்பட்டு நீல நிறமாக மாறியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் குழந்தையின் கையில் பேண்டேஜ் அணிவித்து வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் வீட்டிற்குச் சென்றோம் குழந்தையின் கையில் ஏற்பட்ட வீக்கம் நாளுக்கு நாள் மோசம் அடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மீண்டும் குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.
அங்கிருந்த மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அவர்கள் கூறிய மருத்துவமனைக்குச் சென்றதும் மீண்டும் வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் குழந்தையின் கை மிக மோசமாக பாதிக்கப்பட்ட அழுகிய நிலைக்கு செல்ல தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தை இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தப்பட்டதால் தன்னுடைய குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டை உள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவ அதிகாரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இப்படியான நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையின் கை ஆபரேஷன் மூலமாக அகற்றப்பட வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தவறான ஊசி செலுத்தப்பட்டதால் குழந்தையின் கை பறிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பெறும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
