தங்கம் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகை கடன் தொகை கிராமுக்கு 7000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்த வாரத்தில் இருந்து அமலுக்கு வருகின்றது. முன்னதாக ஒரு கிராம் தங்கத்திற்கு 6000 ரூபாய் வரை மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது. தீபாவளி செலவை கணக்கில் கொண்டு மக்களுக்கு தாமதம் இன்றி கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
